பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேனவுக்கு “சந்த தெக்கட சந்த” நூல் கையளிப்பு

Date:

பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சமன் புஷ்ப லியனகேயின் மொழிப்பெயர்ப்பில், சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றிய  ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) என்ற நூலின் பிரதிகள், இன்று பத்தர முல்லையில் உள்ள இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் L.M.D .தர்மசேன மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் (முகாமைத்துவம்) அமித் ஜயசுந்தர ஆகியோருக்கு, பஹன மீடியா ஊடக அமைப்பின்  தலைவர்,செய்யத் சாலிம் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத அமைப்பின் இணைத் தலைவரும் கல்வி அமைச்சின் ஆலோசனை சபை உறுப்பினருமான கலாநிதி அஸ்ஸையத், ஹசன் மௌலானா அல்காதிரி, பஹன மீடியா ஊடக அமைப்பின்  பணிப்பாளர் அஷ்.அப்துல் முஜீப் (கபூரி) ஆகியோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இறைத்தூதர் முகம்மது நபி அவர்கள் பற்றி மிக அழகிய முறையில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் சிங்கள மொழியிலான நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...