பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேனவுக்கு “சந்த தெக்கட சந்த” நூல் கையளிப்பு

Date:

பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சமன் புஷ்ப லியனகேயின் மொழிப்பெயர்ப்பில், சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றிய  ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) என்ற நூலின் பிரதிகள், இன்று பத்தர முல்லையில் உள்ள இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் L.M.D .தர்மசேன மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் (முகாமைத்துவம்) அமித் ஜயசுந்தர ஆகியோருக்கு, பஹன மீடியா ஊடக அமைப்பின்  தலைவர்,செய்யத் சாலிம் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத அமைப்பின் இணைத் தலைவரும் கல்வி அமைச்சின் ஆலோசனை சபை உறுப்பினருமான கலாநிதி அஸ்ஸையத், ஹசன் மௌலானா அல்காதிரி, பஹன மீடியா ஊடக அமைப்பின்  பணிப்பாளர் அஷ்.அப்துல் முஜீப் (கபூரி) ஆகியோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இறைத்தூதர் முகம்மது நபி அவர்கள் பற்றி மிக அழகிய முறையில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் சிங்கள மொழியிலான நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...