பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கான நாடளாவிய வேலைத்திட்டம்

Date:

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பரந்த அளவிலான வேலைத்திட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கிராமம், நகரம் என்ற பேதமின்றி ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைகளுக்குள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘குழந்தைகள் 8 மணி நேரம் பாடசாலைகளில் இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் பாடசாலைக்கு வெளியே உள்ளனர். எனவே, இதற்கு பெற்றோரின் பொறுப்பு உள்ளது’ என்றார்.

இது கொழும்பில் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் இந்த போதைப்பொருட்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...