பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தாக்குதல்: இதுவரை 10 மாணவர்கள் கைது

Date:

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கி வீட்டை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 மாணவர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த 4 பேரும் இன்று காலை பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு  வந்து சரணடைந்தாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில்  இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மோதலுக்கு காரணமான விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் மேலும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...