மக்களின் பிரச்சினைகளை பயங்கரவாதம் என்றால் இன்னும் பல ஆண்டுகள் சிறையில் இருப்போம்: வசந்தவுக்கு ஜனவரி 17 வரை மறியல்

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் இந்த சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்களின் சுருக்கத்தை நீதிமன்றில் முன்வைக்குமாறு பயங்கரவாத தடுப்பு பணியகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகே நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை பேரூந்துக்குள் இருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

“இந்த நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகளை பயங்கரவாதம் என்று அழைத்தால், நாங்கள் தயார், இன்னும் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் கேவலமான அரசாங்கங்களுக்கு முன்னால் மண்டியிடுவதில்லை’ என்று கூறினார்

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...