கத்தாரின் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஏற்பாடுகள் மனதைக் கவரும் வண்ணம் அமைந்திருப்பதாக பிரான்ஸின் விளையாட்டமைச்சர் அமெலி ஓடே கஸ்டேரா தெரிவித்துள்ளார்.
போட்டியின் ஆரம்பத்தின் போது கத்தார் அமீர் (ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி) ஹலோ எவ்ரிவன் என அனைவரையும் விளித்ததை மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்தமைக்காக கத்தாரை நாம் பாராட்டுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கத்தாரில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் இவர் கலந்து கொண்டிருந்தார்.
பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியுடன் இன்று நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
இந்தப் போட்டிகளைக் காணவென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று கத்தாருக்குப் புறப்படவுள்ளார்.
விளையாட்டை அரசியலாக்கக் கூடாது என முன்னதாக மக்ரோன் தெரிவித்திருந்தார்.