‘மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இலங்கை மாறும் வரை, இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை’

Date:

இலங்கை மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை தென்னிலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் தமது இதயங்களில் ஆழமாக பதிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று  (10) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சமீப காலமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஜனாஸா எரிப்பு போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.

தென்னிலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினரால் நடத்தப்பட்ட பாரிய போராட்டத்தின் போது, பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டபோது, முழு நாடும் கொதிப்படைந்தது.

அப்போது நாங்கள் அவர்களிடம் சொன்னோம், இன்றும் நான் அவர்களுக்குச் சொல்கிறேன், குறிப்பிட்ட நாளில் நீங்கள் பார்த்தது வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நாளும் பொதுவான நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.

மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இலங்கை மாறும் வரை, இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்றும், மனிதர்களுக்கு மதிப்பு இல்லை என்றால், அத்தகைய நாடு எப்படி ஜனநாயக வழியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...