மின் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம்: ரஞ்சித் மத்தும பண்டார!

Date:

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும், வருடத்தின் நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலையேற்றங்கள் அனைத்தும் மிகவும் அநியாயம் மற்றும் அநீதியானது என்பதால், மக்களுடன் இணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மின்கட்டணத்தினை அதிகரித்து இலாபம் ஈட்டும் மின்சார சபை மீண்டும் பழைய நஷ்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் கட்டணத்தை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...