‘மின் கட்டணம் உயர்ந்தால் முறைப்பாடு இன்றி மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும்’

Date:

இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் முறைப்பாடு இன்றி மக்கள் சார்பில் தலையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மின்சார அமைச்சும் இலங்கை மின்சார சபையும் கூறியது போன்று ஜனவரி மாதம் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கும் போது, ​​மக்களை மேலும் ஒடுக்குவதற்கு எந்த கட்சிக்கும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...