வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில்…!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். மஹவத்த  இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரரை, சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பிணையில் விடுவிக்குமாறு கடந்த 23ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம்  காலிமுகத்திடல் போராட்ட சம்பவம் தொடர்பில் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...