வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கை நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
இதன்படி இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டு நாணயமாக வைத்திருக்கலாம் அல்லது அவர்களின் விருப்பப்படி இலங்கை ரூபாவாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தற்போதைய சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அனுபவிக்க முடியும்.