‘2021இல் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் 150 கோடி டொலர்கள் ஈட்ட முடிந்தது’

Date:

கடந்த 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் 150 கோடி அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்ட முடிந்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய தொழிலாக மாற்றுவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் அரச மற்றும் தனியார் துறைகளில் சுமார் 20,000 பணியிடங்கள் வெற்றிடமாகவுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தொழில்துறைக்குத் தேவையான இளைஞர்களை சீரமைப்பது தமது அமைச்சின் பொறுப்பாகும் என்றார்.

ஒட்டுமொத்த டிஜிட்டல் கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறையில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ள 50,000 பேர் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றார்.

அடுத்த வருடம் 34,000 இளைஞர்களை இத்துறைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...