2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு!

Date:

2021 ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருது தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் இணையாசிரியர் மர்லின் மரிக்காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து வருடா வருடம் நடாத்திவரும் அதி சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் வைபவம் கொழும்பு, கல்ஹிஸ்ஸையிலுள்ள மௌண்ட்லாவன்யா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.

தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார் உட்பட லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிலுமின, தினமின ஊடகவியலாளர்கள் ஆறு பேருக்கு  விருதுகள் கிடைத்துள்ளன.

இதில் சிறந்த ஊடகவியலாளருக்கான மக்களின் பிரச்சனைகளை கட்டுரைகள் வடிவில் வெளிக்கொணர்ந்தமைக்காக மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்கள் “சுப்பிரமணியம் செட்டியார்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் சிறந்த வணிக மற்றும் பொருளாதார பத்திரிகையாளர், மற்றும் சிறந்த பத்திரிகையாளர் விருதை வீரகேசரி பத்திரிகையின் ரொபட் சான் பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், ஊடகத்துறையில் ஆற்றியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் துறைவாரியான ஏனைய விருதுகளும் ஊடகவியலாளர்களுக்கு இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஊடகத்துறையில் சிறப்பாக சேவையாற்றிய ஐவர் வாழ்நாள் சாதனையாளராக கௌரவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...