4 மில்லியன் மக்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவப் பற்றாக்குறையினால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறும் ஒரு மில்லியன் மக்கள், தடுக்கக்கூடிய கண் பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், காணப்படுகின்றனர்.

மேலும்  பத்தாயிரம் நோயாளிகள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நிலுவையில் உள்ளனர். புற்றுநோயாளிகள் தற்போது மருந்துப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு நாளாந்தம் சுமார் 3 மில்லியன் மக்கள் மருந்து உட்கொள்வதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரல்

ஈஸ்டர் ஞயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில்...

நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்: 7 மாகாணங்களில் எச்சரிக்கை மட்டத்தில் உஷ்ணம்

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களிலும் கண்டி,...

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...