‘இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்’

Date:

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு வைரஸ்கள் தோன்றக் கூடிய ஆபத்துள்ளது என்றும் எனவே கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை தற்போது சீனாவில் பரவி வரும் புதிய அலை காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குமாறு இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக் மாண்ட்வியா, அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...