இலங்கையில் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை!

Date:

பாலியல் தொல்லைகள் அடிப்படை மனித உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குற்றத்திற்காக தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பினும் இப்பிரச்சினை தொடர்ந்து நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் பாலியல் தொல்லைகள் மற்றும் அனைத்து வித பாலியல் தொந்தரவுகளைக் குற்றச் செயலாகக் கருதுகின்ற உறுப்புரையை தண்டனைச் சட்டக்கோவையில் உட்சேர்ப்பதற்கும் அதற்கு கடுமையாக தண்டனைகளை வழங்குவதற்கும் மற்றும் பாலியல் இலஞ்சத்தை குற்றமாக்குவதற்கும் புதிய உறுப்புரைகளை உட்சேர்த்து தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்தம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...