உணவு வேளைகளை குறைத்துக்கொண்ட மக்கள்: தென் மாகாண மக்களே அதிகம் பாதிப்பு

Date:

இலங்கை மக்கள் தொகையில் 73 வீதமானோர் விலையிலும் போஷாக்கிலும் குறைந்த உணவுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுடன் 52 வீதமானவர்கள் பெற்றுக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளனர்.

இலங்கை உணவு பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான புதிய அறிக்கையில் உலக உணவுத்திட்டம் இதனை கூறியுள்ளது.

அதற்கமைய 40 வீதமானனோர் உணவு சாப்பிடும் வேளைகளை குறைத்துக்கொண்டுள்ளனர்.

நாட்டின் சனத்தொகையில் 76 வீதமானவர்கள் உணவு பாதுகாப்பின்மை காரணமாக உணவு சம்பந்தமாக மாற்று வழிகளை பின்பற்றி வருவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் தென் பகுதியில் 48 வீதமானவர்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தவிர சப்ரகமுவ மாகாணத்தில் 45 வீதமானோரும், ஊவா மாகாணத்தில் 43 வீதமானோரும், மத்திய மாகாணத்தில் 36 வீதமானோரும் உணவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனை தவிர வடமத்திய மாகாணத்தின் சனத்தொகையில் 34 வீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 31 வீதமானோரும் உணவு பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உணவு தொடர்பான பிரச்சினை குறைவாக காணப்படுவதாகவும் உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 26 வீதமானோரும் வடக்கு மாகாணத்தில் 25 வீதமானோரும் உணவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் உலக உணவுத்திட்டத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...