கஹட்டோவிட்டவில் போதைப்பொருளுக்கு எதிரான அமைதிப் பேரணி!

Date:

கஹட்டோவிட்ட முபாரக் மௌலானா தக்கியா மற்றும் நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருளுக்கு எதிரான அமைதிப் பேரணி ஒன்று நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முபாரக் மௌலானா தக்கியாவின் முகத்தம் அல் ஹாஜ் அப்துஸ்ஸமீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி பேரணி நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், தரீக்காக்களை சேர்ந்தவர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், திஹாரிய தக்கியா மத்ரஸா ஆலிம் உட்பட மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முஅத்தீன்கள் முஹிப்பீன்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்து கொண்டு இப்பேரணிக்கு தமது ஆதரவை வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வுக்கு நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீரங்கொல்ல பிரிவு பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணைய உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எம் முஹம்மத் கிராம பாதுகாப்பு கமிட்டி தலைவர்களான அல்ஹாஜ் பிர்தௌவ்ஸ், அல்ஹாஜ் நூருள்ளாஹ், மற்றும் முன்னாள் பிரதேச சபை வேட்பாளர் அல்ஹாஜ் ருஸ்தி, பாதிபிய்யா தக்கியா கலீபா மௌலவி இஜ்லான் போன்றோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீக தலைவர்  அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னு முஹம்மத் ஹபிழஹல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் ஒவ்வொரு தக்கியாக்கள் அமையப்பெற்றுள்ள ஊர்களிலும் நடைபெற்று வரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வின் ஓர் அங்கமாக மேற்படி ‘போதைப்பொருள் இல்லாத பிரதேசமாக மாற்றுவோம்’ என்ற தொனிப்பொருளில்  மேற்படி அமைதிப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.

நிகழ்வை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் ஒருங்கிணைப்பதிலும் நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்காகவும் சமூக சேவகர் மற்றும் கஹட்டோவிட்ட 369 ஏ கிராம பாதுகாப்பு தலைவர் அல்ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்கள் ஒத்துழைப்பு நல்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.

விசேட உரை நிகழ்த்திய நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
‘இதுவரை காலமும் போதைப்பொருள் தொடர்பான பார்வையை தாம் மாத்திரம் பார்த்து வந்ததாகவும் இனிமேல் தமது பொலிஸ் பிரிவுடன் ஊரிலுள்ள நீங்கள் அனைவரும் இக்காரியம் தொடர்பில் அவதானமாக இருப்பதால் தமது காரியம் இன்னும் இலகுவாகிவிட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மிகவும் குறுகிய காலத்துக்குள் இப்பிரதேசத்தை போதையற்ற பிரதேசமாக மாற்ற முடியும் எனவும் இதற்காக பொலிஸ் நிலையம் சார்பாக என்ன உதவி தேவைப்பட்டாலும் எந்த நேரத்திலும் வழங்க தயாராக இருப்பதாகவும், இரவு வேலைகளில் நடமாடும் பொலிஸ் பிரிவின் சேவை தேவையெனில் அதைக்கூட வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமது மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் அவர்களின் பிரதான எண்ணக்கருவே போதைப்பொருள் ஒழிப்பு எனவும் இதற்காக தமது நிலையம் எப்போதும் முன்வந்துதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...