1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முன்பள்ளி குழந்தைகள் மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐந்து வயதுக்குட்பட்ட 18,240 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.