சுற்றுலாப் பயணிகளின் வருகை டொலர் வருமானத்தை அதிகரிக்கிறது!

Date:

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கைகளின்படி, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.

நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதத்தில் 59759 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இது ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 வீத அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 628017 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில், சுற்றுலாப் பயணிகளின் சராசரி தினசரி வருகை 1991 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாதங்களில் 104,989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் இலங்கைக்கு கிடைத்த வருமானம் 273.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...