திருமண வைபவத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி: 50 பேர் படுகாயம்!

Date:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால் இந்த பெரும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது 12 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல் அமைச்சர் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...