நாட்டின் நலனுக்காக மக்கள் விரும்பாத முடிவுகளை நாம் எடுக்கத்தான் வேண்டும்: ஜனாதிபதி

Date:

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மக்களை ஏமாற்றுவது ஏன் எனத் தெரியவில்லை.

மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால் இந்தக் கதையைச் சொல்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார். அவரது செலவுகள் அதிகரிக்கும்.

மேலும் “பொது பயன்பாட்டு சட்டம் மற்றும் மின்சாரச் சட்டத்தின்படி மின் கட்டணத்தை திருத்தும் அதிகாரம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு உள்ளது. யாரும் மின் கட்டணத்தை அதிகரிக்க விரும்புவதில்லை, ஆனால் நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.

மக்கள் விரும்பாத முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். நாட்டின் நலனுக்காக, மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக, இலங்கை இன்று நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

மின்சார சபையைக் காப்பாற்ற, 400 பில்லியன் ரூபாவை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

 

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...