பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கான நாடளாவிய வேலைத்திட்டம்

Date:

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பரந்த அளவிலான வேலைத்திட்டம் ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கிராமம், நகரம் என்ற பேதமின்றி ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைகளுக்குள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பல சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘குழந்தைகள் 8 மணி நேரம் பாடசாலைகளில் இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் பாடசாலைக்கு வெளியே உள்ளனர். எனவே, இதற்கு பெற்றோரின் பொறுப்பு உள்ளது’ என்றார்.

இது கொழும்பில் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் இந்த போதைப்பொருட்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...