‘மின் கட்டணம் உயர்ந்தால் முறைப்பாடு இன்றி மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும்’

Date:

இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் முறைப்பாடு இன்றி மக்கள் சார்பில் தலையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மின்சார அமைச்சும் இலங்கை மின்சார சபையும் கூறியது போன்று ஜனவரி மாதம் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கும் போது, ​​மக்களை மேலும் ஒடுக்குவதற்கு எந்த கட்சிக்கும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...