மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தினால், ஆடை உற்பத்தி நலிவடையும்!

Date:

மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் ஆடைத் தொழில் முற்றிலும் நலிவடையும் என வர்த்தக மண்டல ஊழியர்களின் தேசிய மையம் கூறுகிறது.

ஆடைத் துறையில் உள்ள பல பாரிய கைத்தொழில்களை நாட்டிலிருந்து எடுக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் 03 ஆடைத் தொழிற்சாலைகளை  விலக்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இதற்கு அமைச்சர்கள் குழுவின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை> எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 70 வீத மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமானால் அது மக்களால் தாங்க முடியாததாக இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...