யாழ்ப்பாணம் – சென்னை இடையே வாராந்தம் நான்கு விமான சேவைகள்: அடுத்த வாரம் முதல் ஆரம்பம்!

Date:

இந்தியாவின் Alliance Air 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு வணிகரீதியான விமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயங்கும்.

Alliance Air இன் முதல் சர்வதேசப் பயணத்தைத் தவிர, இது 41 வருட இடைவெளிக்குப் பிறகு சென்னையையும் யாழ்ப்பாணத்தையும் இணைத்துள்ளது.

டெல்லி, கோயம்புத்தூர், அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, துபாய், திருவனந்தபுரம் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு விமானப் பயணத்தை மிகவும் வசதியாக மாற்றும் வகையில் சென்னை வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

Alliance Air இன் பல்வேறு விளம்பரச் சலுகைகளை www.allianceair.in எனும் இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...