விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி!

Date:

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த பெரும் போகத்தில் நெற்பயிர் செய்த 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும் போகத்தில் பயிர் சேதங்களை கருத்தில் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

குறித்த பணத்தை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 1 ஹெக்டேர் நெல் வயல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாயும், அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு 20,000 ரூபாயும் வரவு வைக்கப்படவுள்ளது..

இதனிடையே, பயிர்செய்கைக்காக அரசாங்கம் வழங்கும் உரங்கள் தரமானதாக இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

மனித கௌரவம் என்பது மரணத்தைவிட முக்கியமானது: நிவாரண திட்டங்களை பிரதிபலிக்கும் புத்தளம் கவிஞர் மரிக்காரின் கவிதை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக வெள்ளப்பாதிக்குள்ள மக்கள் எதிர்கொண்ட...

டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய...

துருக்கியில் மாபெரும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.

துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில்...

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்!

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக,...