விவசாயிகளை ஊக்குவிக்கும் பணி தொடங்குகிறது!

Date:

2023 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு 07, கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் தொழில்முயற்சியாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில், விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அதிகபட்ச வசதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏற்றுமதி விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு கணிசமான தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் எள், பச்சை பீன்ஸ் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற தானியங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் 12,500 கிலோகிராம் வாழைப்பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...