அக்குறணைக்கான பெருமை அல்ல, இலங்கைக்கான பெருமை: கத்தார் கிராத் போட்டியில் அஷ்ஷெய்க் காரி ஜாமில் ஹாபிழ் முதல் 100 இடங்களுக்குள்!

Date:

கத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக அல் குர்ஆன் “கிராத்” போட்டியில் அக்குறணையைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் காரி ஜாமில் ஹாபிழ் முதல் 100 இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆன்லைனில் நடந்த இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 1273 காரிகள் கலந்து கொண்டனர், மேலும் முதல் 100 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் காரி ஜாமில் ஹாபிழ் மட்டும் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கத்தாரால் நடத்தப்படும் மிகப்பெரிய உலக அல் குர்ஆன் போட்டி இதுவாகும். தேர்ந்தெடுப்பவர்கள் பெரிய சர்வதேச காரிகள் ஆவார்கள். காரி ஜாமில் ஹாபிழின் வெற்றி இலங்கைத் நாட்டிற்கும் அக்குறணைக்கும் மிகவும் பெருமையான தருணமாகும்.

கத்தார் தோஹாவில் விரைவில் நடைபெறவிருக்கும் காரி ஜாமில் ஹாபிழின் அடுத்த சுற்றுக்காக நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...