அஜி­வதீனின் உரிமை மீறல் மனுமீதான விசாரணை மார்ச் 31 வரை ஒத்தி வைப்பு!

Date:

20 வரு­ட­காலம் பாராளு­மன்ற ஆய்வு உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்­றி­வரும் முஹம்­மது அஜி­வ­தீ­னுக்கு பாரா­ளு­மன்ற பதவி உயர்வில் அநீதி இழைக்­கப்­பட்­ட­தாக தாக்கல் செய்­யப்­பட்ட mnbvcx ரிட் மனுவை (CA-WRIT-304-2022) மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் ஏற்றுக் கொண்டு அதற்­க­மைய குறித்த மனுவில் பெயர் குறிப்­பி­ப்­பட்ட பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம், சபா­நா­யகர், எதிர்­க் கட்சித் தலைவர் மற்றும் பாரா­ளு­மன்ற சபைத் தலைவர் உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அழைப்­பாணை விடுத்துள்­ளது.

குறித்த ரிட் மனு தொடர்பான விவாதம் கடந்தவெள்ளிக்கிழமை (20) மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் அஜிவதீன் அவர்கள் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா முன்னிலையானார்.

இந்த வழக்கில் 5ஆவது பிரதிவாதியான சஜித் பிரேமதாச நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால் வழக்கு மார்ச் 31 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

பாராளு­மன்ற பிரதான ஆய்வு உத்­தி­யோ­கத்தர் என்ற பத­விக்கு அஜி­வ­தீனை விட 7 வரு­டங்கள் மூப்­பு­ரிமை மற்றும் அனு­பவம் குறைந்த ஒரு உத்­தி­யோ­கத்தர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

தற்­போது நிய­மனம் பெற்­றுள்ள உத்­தி­யோ­கத்­த­ருக்கு M.Phil. அல்­லது PhD நிலைக்கு சம­மான அனு­ம­திக்­கப்­பட்ட ஆய்­வு­நிலை கல்­வித்­த­கை­மைகள் இல்லை என்றும் மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­து.

பேரா­தனை பல்­க­லைக்­க­ழக பட்­ட­தா­ரி­யான அஜி­வதீன் அதே பல்­க­லைக்­க­ழ­கத்தில் புவி­யியல் துறை உதவி விரி­வு­ரை­யா­ள­ராக கட­மை­யாற்றி அதன் பின்னர் ஒரு திறந்த போட்டிப் பரீட்­சை­யி­லேயே பாரா­ளு­மன்ற ஆய்வு உத்­தி­யோ­க­த்தராக நிய­மனம் பெற்றார்.

பாரா­ளு­மன்­றத்தில் விடு­முறை மறுக்­கப்­பட்ட நிலையில் 2005 ஆம் ஆண்டு உயர்­கல்­வியைத் தொடர தாய்­லாந்து நாட்டு AIT பல்­க­லைக்­க­ழகத்தில் அவ­ருக்குக் கிடைக்­கப்­பெற்ற புல­மைப்­ப­ரிசில் வாய்ப்பும் கைந­ழு­வி­யது.

அவர் தனது M.Phil கற்­கையை உள்­நாட்டில் பூர்த்­தி­ செய்தார். இலங்கைப் பாரா­ளு­மன்ற செய­லக வர­லாற்றில் M.Phil பட்டம் பெற்ற முத­லா­வது உத்­தி­யோத்­தரும், ஒரு சர்­வ­தேச ஆய்­வ­ரங்கில் பாரா­ளு­மன்றம் சார்­பாக முத­லா­வது ஆய்­வ­றிக்­கையை முன்­வைத்­த­வரும் முஹம்­மது அஜி­வதீன் ஆகும்.

இந்­நி­லையில் தனக்கு இழைக்­கப்­பட்ட அநீதி தொடர்பில் அவர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...