அலி சப்ரி – சவூதி வெளியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு

Date:

பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் அஹமட் ஆகியோருக்கு இடையில் நேற்று (26) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சகல விடயங்களிலும் சவூதி அரேபியா அக்கறை கொண்டுள்ளது எனவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

சவூதி அரேபியா, இலங்கையில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆராயும் என்றும், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கை பரிசீலிக்கப்படும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகத்திற்கு சிறந்த இடமாக விளங்குவதாகவும், தெற்காசியாவில் மட்டுமன்றி கண்டத்திற்கே இலங்கை வர்த்தகத்திற்கு சிறந்த இடமாக இருக்க முடியும் எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...