அலி சப்ரி – சவூதி வெளியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு

Date:

பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் அஹமட் ஆகியோருக்கு இடையில் நேற்று (26) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சகல விடயங்களிலும் சவூதி அரேபியா அக்கறை கொண்டுள்ளது எனவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

சவூதி அரேபியா, இலங்கையில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆராயும் என்றும், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கை பரிசீலிக்கப்படும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகத்திற்கு சிறந்த இடமாக விளங்குவதாகவும், தெற்காசியாவில் மட்டுமன்றி கண்டத்திற்கே இலங்கை வர்த்தகத்திற்கு சிறந்த இடமாக இருக்க முடியும் எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...