ஆணைக்குழுவின் கடமைகளில் அரசியல் அழுத்தம்!

Date:

சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் இன்று (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர், சுயாதீன ஆணைக்குழுவின் வகிபாகம் சுயாதீனமாக செயற்படுவதே தவிர அரசியல் அதிகாரத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதல்ல. அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் தானே தலைமை பதவியை கேட்டதாக கூறியது தெரியாத கதை என அவர் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் வழங்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாதது ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும். அதன்படி இன்று முதல் இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...