இந்திய மற்றும் டுபாய் வர்த்தகர்கள் குழு இலங்கை விஜயம்!

Date:

தம்புள்ளையில் வீசப்படும் குப்பைகளில் இருந்து கரிம உரங்களை உற்பத்தி செய்யும் முறை குறித்து ஆராய்வதற்காக இந்தியா மற்றும் டுபாயில் இருந்து வர்த்தகர்கள் குழுவொன்று தம்புள்ளைக்கு வந்தது.

தம்புள்ளை மாநகர சபையினால் பல வருடங்களாக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கரிம உரத் திட்டம் மற்றும் சுற்றுலா நிலையத்தை அவதானித்ததுடன், இந்திய நிறுவனம் மற்றும் டுபாய் நிறுவனம் ஒன்றினால் சுமார் ஐந்து ஏக்கரில் ஒழுங்குபடுத்தும் திட்டமாக தம்புள்ளையில் ஆரம்பிக்கப்பட்ட  மூங்கில் தோட்டமும் அவதானிக்கப்பட்டது.

இந்தியாவின் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ராம் சுப்ரமணியன் மற்றும் டுபாயைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் அகமது அல் அலி மற்றும் முகமது ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையில் 2000 ஏக்கர் மூங்கில் பயிரிடுவதற்கான திட்டங்களை தயாரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பின்னர் தம்புள்ளை உயன்வத்த புராண ரஜமஹா விகாரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜினரதன சிறுவர் இல்லத்தில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிய இக்குழுவினர் உயன்வத்த புராண ரஜமஹா விகாரையில் இயங்கி வரும் புதிய துறவி பயிற்சி நிறுவனத்திற்கும் நிதியுதவி வழங்கினர்.

ரங்கிரி தம்புலு ரஜமஹா விஹாரஸ்த உயன்வத்த புராண ரஜமஹா விகாரை, ஹல்மில்ல ஏரியின் பேமரத்தன தேரரிடம் டுபாய் நாட்டு வர்த்தகர்கள் பீரிட் ஓதியதுடன், பீரித் நூல்களையும் கட்டிக் கொடுத்தமை இங்கு விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...