இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவை இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்தது!

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுப்படி, சீனா மற்றும் இந்தியாவுடனான இலங்கையின் கடன் பேச்சுவார்த்தை “வெற்றிகரமானது” என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்ட 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கான முக்கியத் தடையை நீக்க உதவும் என்று ‘Bloomberg’ இணையதளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பேசுகையில், இனி எமக்கு எஞ்சியிருப்பது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் உடன்படிக்கையைப் பெறுவதுதான். தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது என்பதை என்னால் இந்த சபையில் கூற முடியும். விரைவில் அதற்கான பதில் கிடைக்கும்,” என்றார்.

கடன் வசதியைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னர், சீனா, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் உறுப்பினர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாதங்களை இலங்கை பெற வேண்டும்.

இதேவேளை, இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மான செய்தியாளர் மாநாட்டில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட வேண்டிய கடன் தொகை இதுவரை வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

“வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அமைச்சரவைக்கு தெரிவித்தார்.

மிகவும் நம்பிக்கையான பதில்கள் கிடைத்து வருகின்றன. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்பட்டு வருவதாகவும், அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா,...

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...