இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவை இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்தது!

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுப்படி, சீனா மற்றும் இந்தியாவுடனான இலங்கையின் கடன் பேச்சுவார்த்தை “வெற்றிகரமானது” என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்ட 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கான முக்கியத் தடையை நீக்க உதவும் என்று ‘Bloomberg’ இணையதளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பேசுகையில், இனி எமக்கு எஞ்சியிருப்பது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் உடன்படிக்கையைப் பெறுவதுதான். தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது என்பதை என்னால் இந்த சபையில் கூற முடியும். விரைவில் அதற்கான பதில் கிடைக்கும்,” என்றார்.

கடன் வசதியைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னர், சீனா, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் உறுப்பினர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாதங்களை இலங்கை பெற வேண்டும்.

இதேவேளை, இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மான செய்தியாளர் மாநாட்டில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட வேண்டிய கடன் தொகை இதுவரை வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

“வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அமைச்சரவைக்கு தெரிவித்தார்.

மிகவும் நம்பிக்கையான பதில்கள் கிடைத்து வருகின்றன. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்பட்டு வருவதாகவும், அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...