இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்த FIFA !

Date:

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.

ஜனவரி 21 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் உபாலி ஹேவகேவுக்கு கடிதம் மூலம் இந்த தடையை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய அதிகாரிகள் சபை நியமிக்கப்பட்ட போதிலும், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் புதிய அதிகாரிகள் சபையை ஏற்றுக்கொள்ளாததால், முன்னாள் செயலாளர் பெயருக்கு தடை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. .

அண்மையில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு, விளையாட்டு அமைச்சும் சர்வதேசமும் உறுதியளித்தவாறு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பை திருத்தாமை, உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் முன்னர் இணக்கம் காணப்பட்ட விதிகளுக்கு  செயற்படாத காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்சியாளர் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகள் அல்லது வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...