இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்!

Date:

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அவற்றுக்கான கால அவகாசம் அன்றைய தினம் முடிவடையவுள்ளதாலும், ஜனவரி 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் உரிய விவாதத்தை நடத்துமாறு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனியார் உறுப்பினர்களின் முன்மொழிவுகளில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கான அமைச்சின் பரிந்துரை நேற்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...