உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் சம்பிக்க -குமார வெல்கமவின் புதிய கூட்டணி!

Date:

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை கூட்டாக எதிர்கொள்ள  பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை,ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க,

43 ஆவது படையணியை  அரசியல் கட்சியாகவோ அல்லது தேர்தலை இலக்காகக் கொள்ளவோ தாம் உத்தேசிக்கவில்லை என்றும், நாடு கடந்த வருடம் வங்குரோத்து நிலைக்குச் சென்றதை அடுத்து, அந்த இயக்கத்தை புதிய அரசியல் கட்சியாக மாற்றத் தீர்மானித்ததாகவும்   தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியுடன் (NLFP) இணைந்து 43 ஆவது படையணி உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் என்றும் ரணவக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வெல்கம,  கட்சியில் இருந்து பிரிந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்  ஆசியுடன் புதிய லங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...