‘கொழும்பு மேயர் வேட்பாளர் நானே’: அடம்பிடிக்கும் ரோஸி

Date:

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரண்டாவது தவணைக்காக போட்டியிடவுள்ளார் மற்றும் ஏற்கனவே தனது வேட்பு மனுக்களை கையளித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நானே மேயர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன் என்று கொழும்பு மாநகர சபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி  இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

கொழும்பு மாநகர சபைக்கு இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் போட்டியிடுகின்றார்.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...