சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Date:

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலி முகத்திடலில் 75ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்விற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதனை பொது நிர்வாக அமைச்சு உறுதி செய்துள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செலவுகளை குறைக்க முயற்சிக்கப்படும் எனவும், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார போபகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 75ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும், நிறைவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...