சுதந்திர தின விழாவையொட்டி இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

Date:

75-வது தேசிய சுதந்திர தின விழாவையொட்டி கட்டப்படும் தேசிய இளைஞர் மேடைக்கான விண்ணப்பங்கள் கோரல் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் சக்திவாய்ந்த இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், இளைஞர் சமூகத்தை பொறுப்புடன் பங்களிக்கச் செய்வதற்காகவும் தேசிய இளைஞர் மேடை உருவாக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சமூகம் முன்வர வேண்டும், முன்னின்று செயற்பட வேண்டும் எனவும், அதற்கு தேசிய இளைஞர் மேடை ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனவும் ஜனாதிபதி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.

இளைஞர் மேடையில் இணைவதற்கு  தயாரிக்கப்பட்ட விண்ணப்பம் 2023 ஜனவரி 31 அல்லது அதற்கு முன்னர் dir.ysd@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!

மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...