டுபாயில் இலங்கை இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது!

Date:

டுபாய் சந்தையில் இலங்கையில் உற்பத்தியாகும் இளநீர் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்தார்.

அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இளநீர் ஏற்றுமதி தொடர்பான பல பண பரிவர்த்தனைகள் முறையின் ஊடாக மேற்கொள்ளப்பட்டமையால் இந்த நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

டுபாய் சந்தையில் ஒரு இளநீர் 500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர் ஒன்று அந்நாட்டின் கரையோரப் பகுதியில் 2500 ரூபாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2022ஆம் ஆண்டு இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 06 பில்லியன் ரூபா் எனவும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு சந்தையில் இளநீருக்கான தேவை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கை சந்தையிலும் இளநீர் விலை அதிகரிக்கலாம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...