நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசை?

Date:

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டண உயர்வை அதிகரிக்காவிட்டால், நிச்சயமாக நீண்ட மின்வெட்டு ஏற்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

மின்சார உற்பத்திக்காக கொள்வனவு செய்யப்படும் எரிபொருளுக்கான கட்டணத்தை மின்சபை செலுத்தாவிட்டால் நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான  தொகை தற்போது பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்திடம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...