நிதி கொடுப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறைசேரி அதிகாரிகள் விளக்கம்!

Date:

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இந்நேரத்தில் நடத்தினால், தேர்தல்கள் ஆணைக்குழு கோரும் பணத்தை ஒரேயடியாக வழங்காது பகுதிவாரியாக வழங்க முடியும் என பொது திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே திறைசேரி அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மற்றும் அதன் அங்கத்தவர் சபை மற்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள நிதிச் சிக்கல்கள் காரணமாகப் பணத்தைப் பகுதிகளாக வழங்க முடியும் என திறைசேரி சார்பில் கலந்துரையாடலுக்கு வந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...