பஹன மீடியா ஏற்பாட்டில் நடைபெறும் மூன்று நாள் மோஜோ பயிற்சி நெறி வெற்றிகரமாக தொடங்கியது!

Date:

புத்தளம் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிக்கொணர்வதை இலக்காகக் கொண்டு பஹன மீடியா ஏற்பாட்டில் நடைபெறும் மூன்று நாள் மோஜோ பயிற்சி நெறி இன்று ஆரம்பமாகியது.

ஓய்வுநிலை புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸன்ஹீர், சட்டத்தரணி அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான், வளவாளராக மொஹமட் அஸ்வர் ஆகியோரின் பங்கேற்பில் இன்றைய பயிற்சி அமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் ஐசொப்ட் கல்லூரியில் நடைபெறும் இந்தப் பயிற்சி நெறிக்கு புத்தளம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 16 இளம் ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்

பஹன மீடியா பணிப்பாளா் அஷ்ஷெய்க் எம்எஸ் அப்துல் முஜீபின் தலைமையில் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி நெறிக்கு அமேசான் கொலேஜ், டயபர்ஸ் லிமிடெட், அல் ஹிமா இஸ்லாமிய நிறுவனம், ஐசொப்ட் கொலேஜ் ஆகியன அனுசரணை வழங்குகின்றன.

பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதோடு நிவ்ஸ்நவ் ஊடகத்தினோடு இணைந்து தமது படைப்பாக்கங்களை வெளியிடுவதற்கான அவகாசமும் வழங்கப்படும்.

பயிற்சி நெறி இனறும் (14) நாளையும் நடைபெறுவதோடு இறுதி நாளாகிய 21 ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வில் புத்தளத்தைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

Popular

More like this
Related

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...

இலங்கைத் தூதுவர் – நேபாளப் பிரதமர் சந்திப்பு!

நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய, காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட ஏனைய...

காசாவில் அல் ஜசீரா செய்தியாளர் முகமது விஷாஹ் கொ*லப்பட்டார்: பத்திரிகையாளர்கள் பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு.

அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது...

லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம்: ஈரான் எச்சரிக்கை.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட  பிறகு,நேற்று...