புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் பரிசீலனை இறுதி கட்டத்தில்..!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 99 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த விடைத்தாள்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என பல கட்டங்களின் கீழ் சோதனை நடத்தப்பட்டு வருவதாக  பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் கணினிமயமாக்கும் பணி தொடங்கும். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல பிரச்சினைகள் பதிவாகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அநீதி இழைக்கப்பட்ட மாணவர்கள் யாரேனும் இருந்தால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள் அவர்களுக்கு நீதி வழங்கப்படும். 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 2,894 நிலையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு மூன்று இலட்சத்து முப்பத்து நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு மாணவர்கள் தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் கனிம எண்ணெய்...

கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில்...

இன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

இன்று (29) முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று...

*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*

உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’...