புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் பரிசீலனை இறுதி கட்டத்தில்..!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 99 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த விடைத்தாள்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என பல கட்டங்களின் கீழ் சோதனை நடத்தப்பட்டு வருவதாக  பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் கணினிமயமாக்கும் பணி தொடங்கும். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல பிரச்சினைகள் பதிவாகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அநீதி இழைக்கப்பட்ட மாணவர்கள் யாரேனும் இருந்தால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள் அவர்களுக்கு நீதி வழங்கப்படும். 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 2,894 நிலையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு மூன்று இலட்சத்து முப்பத்து நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு மாணவர்கள் தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...