போதைக்கு எதிராக புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணி!

Date:

போதையை ஒழிப்போம், போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியை புத்தளம் மாவட்டத்தின் சர்வமத அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாக புத்தளம் மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி நகர மண்டபத்தைச் சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சர்வமத தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

போதைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த விழிப்புணர்வு பேரணியில் இவர்கள் கலந்து கொண்டனர்.

நகர மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான விஷேட கூட்டத்தில் புத்தளம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரவீந்திர விக்ரமசிங்க

புத்தளம் மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை செனவிரத்ன ஆகியோரிடம் புத்தளம் மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் போதை ஒழிப்பு தொடர்பான மகஜரையும் கையளித்தனர்.

(தகவல்: எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...