போதைக்கு எதிராக புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணி!

Date:

போதையை ஒழிப்போம், போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியை புத்தளம் மாவட்டத்தின் சர்வமத அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாக புத்தளம் மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி நகர மண்டபத்தைச் சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சர்வமத தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

போதைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த விழிப்புணர்வு பேரணியில் இவர்கள் கலந்து கொண்டனர்.

நகர மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான விஷேட கூட்டத்தில் புத்தளம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரவீந்திர விக்ரமசிங்க

புத்தளம் மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை செனவிரத்ன ஆகியோரிடம் புத்தளம் மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் போதை ஒழிப்பு தொடர்பான மகஜரையும் கையளித்தனர்.

(தகவல்: எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...