முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை பற்றிய அறிவிப்பு!

Date:

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நாளையுடன் (20) நிறைவடைகின்றது.

தமிழ், சிங்களப் பாடசாலைகள் அனைத்துக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதோடு, உயர் தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுகிறது.

முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதிவரை தொடரும்.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் 2022 ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட செயற்பாடுகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறையில் மாற்றம் 

ஏற்கனவே 2022.10.21 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைக் கலண்டரில் கல்வி அமைச்சு மாற்றம் செய்து அறிவித்துள்ளது.

முன்னர்  அறிவிக்கப்பட்டதன் படி, 2023.2.15 இல் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் முடிவடைந்து  2023.03.01 ஆம் திகதி மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், புதிய அறிவிப்பின் படி பின்வருமாறு மூன்றாம் தவணையின் ஏனைய கட்டங்கள் நடைபெறும்.

மூன்றாம் தவணை, இரண்டாம் கட்டம் – 2023.02.01 திங்கள் முதல் 2023.02.06 திங்கள் வரை நடைபெறும்

மூன்றாம் கட்டம் – 2023.02.20 திங்கள் முதல் 2023.03.21 செவ்வாய் வரை நடைபெறும்.

2023.02.07 – முதல் 2023.2.19 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...