வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமிழ் பெண் நியமனம்!

Date:

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் (02.01.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நூறு வருடங்களைக் கடந்து வெற்றி நடை போடும் விவசாயத் திணைக்களத்தின் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பணி புரியும் பல்லாயிரம் சேவையாளர்களினதும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவரது சேவைக் காலத்தில் நமது நாட்டு விவசாய பெருமக்களும் தங்கள் உற்பத்தியில் தன்னிறைவடைந்து நம் தேசமும் வளமடைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் எமது தாய் நாட்டுக்கான  பணி மேன்மேலும் உயர்வடைந்து புகழ் பெற வேண்டுமென ‘நியூஸ் நவ்’ வாழ்த்துகின்றோம்!

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...