ஷாஃப்டர் கொலை வழக்கின் ஆதாரங்கள் நீதிமன்றில்: ஊடகங்களுக்கு அனுமதி இல்லை!

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றத்திற்கு பதிலாக நீதவான் அறைக்கு அழைக்கப்பட்டன.

அதன்படி, ஆதாரங்களை ஊடகங்களுக்கு திறக்காமல் மறைமுகமாக பெறப்பட்டு வருகிறது.

பிரேத பரிசோதனை சாட்சியம் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அழைக்கப்பட்டு இன்று மதியம் 12.30 மணியளவில் ஆரம்பமானது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக தினேஷ் ஷாப்டரின் மனைவி கிறிஸ் பெரேரா, அவர்களது நிறுவனமொன்றின் பணிப்பாளர் மற்றும் பொரளை கல்லறை தோட்ட ஊழியர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...