இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியா வழங்கும் ஆதரவிற்கு அலி சப்ரி நன்றி!

Date:

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியா வழங்கிய ஆதரவிற்கு அலி சப்ரி ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...